Popular Posts

Sunday, April 15, 2012

அடீங்!

சீமான் வீட்டு நாய், சிம்மாசனம் ஏறுதுன்னு, அண்ணன் வீட்டு நாய் வெள்ளாவியில ஏறி விளையாடன கதையாய், நாமுளும் முன்னேறியாச்சு! நாடும் முன்னேறியாச்சு! நூறடி ரோடும், பத்து மாடி கட்டிடமுமா..ஜிகுஜிகு’னு சிட்டி மணக்குது! இப்பல்லாம், கிராமத்தான்’னு சொல்லிக்க ஒரு ஆளும் இல்லை!
காடு, கழனி, தோட்டம், தொரவுகளை கூறு போட்டுப்ளாட்டு போட்டு வித்தாச்சு விவசாயிகள்!
கட்டுகட்டாய் நோட்டுகளை எண்ணி, பாங்க்லேயும் போட்டாச்சு! குந்தி திங்க வட்டி பணம் வருது! அப்புறம் என்ன? மாட்டு வண்டியிலே போன பண்ணைமாருக.. டாட்டா சுமோவில்பவனி வர்ற அழகே தனி! இதெல்லாம் பார்த்தாக்க, ‘அடீங்..கொய்யாலே!என்பதின் முழு அர்த்தம் அப்பட்டமா விளங்குகிறது!
ரியல் எஸ்டேட்’ பிஸினெஸ்ஸாம்! டிவி பெட்டிலே, கொமரிப்பொண்ணு, நமக்கு சொல்லுது..’நாலே எட்டிலே ஏர்ஃபோர்ட்டாம்! மூணே எட்டிலே ரயில்வே ஸ்டேஷனாம்! நாலு ப்ளாட் வாங்கினா கமர்கட்’ ஃப்ரீயாம்!

பிளாஸ்டிக் மரம் வச்சு, தண்ணியே ஊத்தாம வளர்க்கிறாங்க பாவி பசங்க!
அட! அதை வுடுங்க! இங்கிலீஸ் ஸ்கூல்லேதான் குழந்தைக படிப்பே ஆரம்பிக்குது!
ஆட்டோகாரன்தான், குழந்தைகளை இஸ்துகுணு போறான்!
ஓரு ஆட்டோ’குள்ள ஒரு இருபது உருப்படிகள்!

‘ஹாய்! மம்மி!என்று டாட்டா காட்டிட்டு..அதுக போறத பார்த்து, பெத்தமனம் பித்தா போச்சு!
கவர்மெண்ட் பள்ளிக்கூடத்தில், தமிழ் வாத்தியார் இருக்காராம்! அங்கே படிச்சா.. அறிவே வராதாம்!
ஒத்த பிள்ளையை, பெத்துட்டு, இந்த இஸ்கூலுக்கா அனுப்புறது? என்று கடன் வாங்கி, டவுனுக்கு படிக்க அனுப்பி வைக்கும் மாத வருமான மானஸ்தர்கள்!
டீக்கடை ஆறுமகம், பொட்டிக்கடை பொன்னாத்தா வாரிசுகள், பாஸ்போர்ட் வாங்கி, அமெரிக்கா போய்விட்டார்கள்!

வளர்ச்சி அப்படி!
கள்ளு, பட்டைச்சாராயம் போன்ற அந்த கால சரக்குகள் அழிந்து, பெக்கார்டி, ஆர்ஸி என்று  நவீன பானங்கள், பலருக்கு அன்றாட சரக்குகள் ஆகிவிட்டன! உடம்புக்கு வேற நல்லதாம்! ..க்கும்!
ஏ.சிஇல்லாமல் எனக்கு தூக்கமே வரல!என்று, மகளிர் அழகு நிலையங்களில், ஆடு மேய்த்த  அருக்காணி அக்காக்களின் பேத்திகள், பேசிக்கொல்லும்(!) அழகே தனி!
சுடுகாட்டுக்கு தனியே போகத்தெரியாத, கருமம் பிடித்த அம்மா, அப்பாக்களை, மாமியார், மாமனார்களை, மாதா மாதம் ஒரு அமெண்ட்’டைக்கட்டி, பழைய டிவி/ஃபிரிட்ஜ் பொட்டிகளைபோல, முதியோர்கள் இல்லங்களில்  தள்ளி விட்டு, மல்டி நேஷனல் கம்பனியில், மாதம் பல லட்சங்களில் புரளும், படிச்ச அவலட்சணங்கள் பல!
டாப் ஸ்டூடன்ஸ்களாம்! க்ரீம் ஆஃப் த சொஸைட்டி!
அட! மைக்ரோ ஸாப்ட் பில் கேட்டே சொல்லிட்டாரே! பின்ன என்ன பண்ணறது? நம்பித்தொலைக்க வேண்டி இருக்கு!
மாருதி-800 காரில் போனாலே, மகா கேவலமாம்!
ஆய்-10 ஓரளவு பரவாயில்லையாம்!
இந்த புதுப்பணக்காரர்களின், உபத்தரம்,மூத்திரம் தாங்காமல், காலங்காலமாக, பணக்காரர்களாக இருந்தவர்கள், ஓபராய் ஹோட்டல், மெரிடன் என்று தங்கள் ஜாகைகளை, மாற்றிக்கொண்டு அலைகிறார்கள்!!
முக்குக்கு மூணு டாஸ்மாக் கடையை, கவர்மெண்டே திறந்து வைக்கிறது!
வருமானம் அப்படி!
மூக்குப்பிடிக்க குடிக்க, குடிமகன்கள், அதிகாலையிலே வந்திடாறங்களே!

அப்புறம், சினிமா!

“நான் குடிச்சா நல்லவன்டா! நாலு நாளா, பாத் ரூம் போனவண்டா!”-என்று ஓபனிங் ஸாங் எழுத (துட்டு கொடுத்தா..) கைரமொத்து இருக்க, பூமியை நாலு பீஸா.. ஒடைச்சு, தரைமேலே குதிச்சு வரும் ஹீரோ, படம் முழுதும் குத்துபாட்டுக்கு ஆடும் ஹீரோயின் கலையரசிகள்!
அப்புறம் டாப் டென்! சீரியல்! சுள்ளம்மா சமையல்!
மானும், மயிலும் மானங் கெட்டாட!
அட! போங்கப்பா! கண்ணைக்கட்டுது!
ஊடாலே, இந்தியாவின் ஜனத்தொகை வேறு கிர் கிர்என்று ஏறி, உலக நாட்டையே அதிர வைக்கின்றது!
மக்கள் சந்தோஷமாக இருக்கின்றார்கள்! என்ற செய்தி நல்ல விஷயம்தானே!

பணம் புரளுது கழுதை மாதிரி!

அது கையிலே இல்லாதவன், கிழவி கழுத்தறுக்கலாமா? இல்லை, பாங்க் பொட்டி உடைக்கலாமா? என்று யோசிக்க ஆரம்பிச்சிட்டான்!
நாலு காசு கையில் இருந்தா, எங்கேயும் தனியா போக முடியல!
 போட்டுத்தள்ளிடறாங்க!
இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம்! 
அப்படிச்சொன்னா...
“இந்த பெருசுக்கு வேற வேலையே இல்லை!”-இப்படி பகடி பண்ணிப்புடுவானுக..
அதனாலே..
’நாடு நாலு கால் பாய்ச்சலில் முன்னேறுது! நல்ல விஷயம்தான்!’ - சொல்லி முடிச்சுகிறேன்!
மனசுக்குள்ள மட்டும் யாருக்கும் கேட்காம சொல்லிக்கிறேன்..’அடீங்..கொய்யாலே!” !

-அன்புடன் திருநாவு.

No comments: