Popular Posts

Tuesday, June 18, 2013

'கிருஷ்ணவேணி முறுக்குப்பிழிந்து கொண்டிருந்தாள்!’


'கிருஷ்ணவேணி முறுக்குப்பிழிந்து கொண்டிருந்தாள்!’


ஒரு சிறுகதை எழுதலாம் என்று எண்ணி இப்படி எக்குத்தப்பாக ஆரம்பித்து விட்டேன்.


இனி எப்படி கதையைக்கொண்டு போவது?


முறுக்கு பிழிந்துகொண்டிருப்பதெல்லாம் ஒரு ஆரம்பமா? என்று யாரும் அலுத்துக்கொள்ள வேண்டாம்!


கிருஷ்ண வேணி, பதினெட்டைத்தொட்டு கொண்டிருக்கும் அழகுப்பதுமை


இப்படி அடுத்த வரிகளில் எழுதினால், இந்தக்கதையை படிக்காமலா போய் விடுவீர்கள்?


அந்த அழகு ராட்சஸி முறுக்கு பிழிவதை, மசாலா-வடைக்கு மாவு பிசைந்து கொண்டிருந்த, ரங்கசாமி, ஆசையோடு பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான்!


..ம்! சிறுகதை என்றால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்!


ஆனால், இது ஒரு உண்மைக்கதை!


கிருஷ்ண வேணிக்கு வயது அறுபது! வறுமை வறுத்தெடுத்த வடிவு!


சுருக்கங்கள் சொந்தம் கொண்டாடும் தளர்ந்த முகம்!


ரங்கசாமிதான் அவளின் கணவன்!


தள்ளு வண்டி வியாபாரம்தான், அவர்கள், வாழ்க்கையைத்தள்ளி கொண்டிருக்கின்றது!


முறுக்கு-மாவுக்கு, உப்பு, காரம் சரியாக போட்டாளா? இல்லை மறந்து விட்டாளா? என்கிற

 கவலையோடுதான், வடைக்கு மாவாட்டிக்கொண்டிருந்த ரங்கசாமி, கிருஷ்ணவேணியை

 பார்த்துக்கொண்டிருந்தான்.


இனிமேல்  இந்தக்கதையை நீங்கள் தொடர்ந்து படிக்க மாட்டீர்கள் என்று தெரியும்!


ஆகவே மேலே எழுதி என்ன புண்ணியம்?


மீண்டும் சந்திப்போம்!


அன்புடன்,


திருநாவு


18-06-2013

No comments: