நிதீஷின் சரித்திர சரிவு!
பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், பாரதிய ஜனதா கட்சியுடன், தன் கட்சி கொண்டிருந்த பதினேழு வருட உறவை முறித்துக்கொண்டு வெளியேறி விட்டார்!
இது ஒரு சரித்திர முடிவு! ஆகவே, நாமும் நமது கருத்தை பதிந்து கொள்வது சரித்திர அவசியமாகிறது!
சரத் யாதவ் மற்றும் நிதீஷ் சொல்லும் காரணங்களை அலசிப்பார்த்தால், நம் தலைதான் கரணம் அடிக்கின்றது!
குஜராத் மோடியை பிடிக்கவில்லை!
அதுவும் அவர் பிரதமராக வருவதைக்கொஞ்சம் கூட பொறுத்துக்கொள்ள முடியாது!
ஆனால், அத்வானி வரலாம்!
தம்பி வரக்கூடாது! அண்ணன் மட்டும் என் வீட்டுக்கு வரலாம் என்றால், அவர்களுக்குள் பேதம் வராதா?
சரி! நிதீஷின் முடிவில், என்ன தர்க்கம் இருக்கிறது?
மதவாதம் மீண்டும் வந்துவிடக்கூடாது என்ற ஆதங்கம்!
அத்வானி வந்தால், மதவாதம் மலராது.
மோடி வந்தால் மதவாதம் கோரத்தாண்டவம் ஆடும்!
இதுதான் அவரது வாதம்!
அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது.
ஓட்டு வங்கி அரசியல்தான் இவர்களை இயக்கிக்கொண்டிருக்கின்றது என்பதைக்கண்டு பிடிக்க, மிகப்பிரமாதமான அரசியல் அறிவு தேவையில்லை!
சரி! இனி இவர் என்னதான் செய்யப்போகிறார்?
ஜெயப்பிரகாஷ் நாரயணன் போல் தன்னை மாற்றிக்கொண்டு,
மூன்றாம் அணி அமைத்து, பிரதமராகலாம்!
அல்லது
காங்கிரஸோடு கைசேர்த்துக்கொண்டு, அரசியல் பாதையை வேறு திசை நோக்கி செலுத்தலாம்!
மொத்த்த்தில், ஒரு இழவும் புரியவில்லை!
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்!
நிதீஷின் கைங்கரியத்தில்…
லல்லு பிரசாத் யாதவ் மீண்டும் உற்சாகம் பெற்று விட்டார்!
காங்கிரசால் தனது புன்னகையை மறைக்க இயலவில்லை!
அன்புடன்,
திருநாவு
18-06-2013
No comments:
Post a Comment