Popular Posts

Saturday, July 30, 2011

என் "ட்விட்" கள்!




1.கோழி முட்டை போடறதுனால பெயில் பண்ண முடியுமா? 
2. இந்த திங்கள், செவ்வாய் எல்லாம்.. ஒரே வாரத்திக்குள்ள வரது..
அதனால தான் வாரா வாரம் வருது! # திடீர் கண்டுபிடிப்பு
3. "பணம் ரெடி..வாங்கிக்கோ.. " # பேச்சில் இனிமை!
4.தூர இருந்தால் சேர உறவு !
இந்த கொசுக்கடியை விட.. உறவுக்கடி..ரொம்ப நெருக்கடி..
5. "ஆ" என்பது "அ" ஆனது! தமிழ் வளர்ச்சிதானே..
அதை ஒரு மழழை சொல்லும்போது!
6. அந்த காலத்தில் "பொட்டுக்கட்டியவர்கள்" போட்ட வட்டங்களை
கட்டம் கட்டி, இன்னும் தூக்கிப்போடவில்லை என்றால், நாடு முன்னேறாது!
6. ஆண்கள் தவறுகள் மறக்கபடுகிறது! பெண்கள் கூண்டிலேற்றப்படுகிறார்கள்!! நியாயமற்ற வாதங்கள்.
7.ஒரு பலாச்சுளையே பலாச்சுளையை சாப்பிட்டது!
-ஒரு பலாக்கொட்டையின் புலம்பல்!
8.ஒழுங்கா இருந்தவன் கூட கெட்டுவிடுவான்! 
கெட்டவன் கூட திருந்தி விடுவான்! # உன் அழகில்
9. கிராமத்து திண்ணைகளில் தினமும நடக்கும் "ட்விட்"களின் இனிமை  ஒரு தனி சுகம்!
10. தெருநாய்கள் குரைக்கும் தைரியத்தில்,
மேக இருட்டுக்குள் இருந்து தப்பிய நிலவு!
11. நான் உன்னக் கடிச்சேன்! நீ என்னக் கடிச்சே! 
தன்னாலே ஒரு ட்விட்டாச்சு!
12. நிலத்தை விற்றா கோலம் போடறது?
சுத்தியை விற்றா ஆணி புடுங்கறது?
13. பண்டமாற்று முறை: ஒவ்வொரு மொக்கை தத்துவத்திக்கும், ஒரு மொக்கை காதல் கவித கண்டிப்பாக அனுப்பபடும்!!
14. கடவுளை மறுப்பவன் நினைக்கிறான்! ஏற்றவன் மறக்கிறான்!
15. நீ என் கடிதத்தை கண்டவுடன் "தை..தை.." என்று குதித்ததனால் 
கடிதம் கவிதை ஆனது!
16. ..சீக்கிரம் குளித்து விடு! உன் வாசம்!!! (ஹும்.ம்)
17. நல்லா கவனிங்க..சில 'மிஸ்ஸுடு' கால்லே..எல்லா 'டிஜிட்'டுகளும் 'மிஸ்ஸிங்'கா இருக்க போகுது!
18. சாவின் விளிம்பில்.. சறுக்கி விழுந்தது மரணம்! பிழைத்தது காதல்!!!
19.அதிகாலை மைதானம்! சர்க்கரையை கரைக்கும் முயற்சியில் மெடிக்கல் டெஸ்ட்களின் நடைபயிற்சி!
20. முயல்களாய் ஓடும் அணில் குட்டிகள்!- பள்ளிமைதானம்!
21. மறதி, மனத்தின் மௌனம்! காதல் இளமையின் கௌரவம்!
வீழ்ச்சி, சபலத்தின் ஆட்சி!  வெற்றி, நட்பின் பலம்!
22. பொறாமை வியப்பின் வெளிப்பாடு!
23. நல்ல டிவிட்'க்கு ஷொட்டு!    மொக்கை டிவிட்'க்கு கொட்டு!
24. உன் பார்வைக்கு இன்னும் transliteration வரவில்லையே!#கவித
25. தன்னைத்தானெ புத்திசாலின்னு நினைப்பவன் முட்டாள்! தன்னைத்தானெ முட்டாள்ன்னு நினைப்பவன் புத்திசாலி! #கலவைதான் ட்விட்டர்ஸ்ஸ்!
26. பைட்டாக(byte) துளிர்த்த காதல் இன்று டெரா பைட்டாக மலர்ந்துவிட்டது!!
27. உன் பார்வை "ப்ளூ டூத்"தாய்..என்னுள் ஏற்றிய மென்பொருள்கள் கோடி!  
28. உன் டிஜிட்டல்(digital) பார்வையில்..நான் அனலாக்(analogue) கவியானேன்!
29. இரண்டு மௌனங்கள்..பேசாத போது.. மனங்கள் நொறுங்கும்!
30. மௌனத்தின் கர்ப்பம் துரோகமென்றால்.. மனக்கண்ணாடி நொறுங்கும்!
31. காதல் கவித எழுதி..எழுதி..நான் காதல் செய்வது, காதலிக்காகவா? இல்லை. கவிதை மட்டும் எழுதுவதற்காகவா என்று குழப்பம் வந்துவிட்டது!
32. நான் ரொம்ப பிஸி! - இதுக்கு இன்னா அர்த்தம்னா "கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன்"
33. "நான் ஃப்ரிதான்..சொல்லுங்கோ! "-இதுக்கு இன்னா அர்த்தம்னா "கோழி மாட்டப்போகுது!
34. பேச்சு பேச்சா இருந்தா..தான் பேச்சலர்!
35 அடி வாங்கினவனக்கு, அடியின் அருமை தெரியுமோ.. தெரியாதோ..அப்பா தந்த அறிவுரை ஞாபகத்துக்கு வரும்!
நம்மை சுற்றியுள்ள சுவர்கள் சிரிக்கின்றன! நம் லட்சணம் அதற்குதானே தெரியும்!!
04-Aug-2011
36. எல்லா வழிகளும் இறைவன் அமைத்தவை! உன் வழி..என் வழி..என்பது நாம் வகுத்தவை! வலிகளும் அவ்வண்ணமே!
37. உழைக்கிற உடம்பு களைக்காது! வீணா பிழைக்கிற வாழ்க்கை நிலைக்காது!
38. காண்டா மிருகத்திற்கு போண்டா வாங்கித்தரமுடியாது!
கள்ளு குடிச்சா வீடு போய் சேர முடியாது!
38. சிரித்தாள்! ஒளி வெள்ளம்!
39. நடந்தால் திருவிழா! நீ..சுனாமிப்பேரழகி!!
40. "டர்ங்..கிது..புர்ங்..கிது.." இதுக்கு இன்னா அர்த்தம்? பயந்தவன் புட்டுகுடுவா"
41. ஒரு குழந்தைமேல் வர்ற இயற்கையான அன்பு போலத்தான் உண்மையான காதலும்!
42. ரெண்டு காலே இல்லாமல் "ஒத்தை கால்" லே நிற்கிறானே அவன் தான்டா வீரன்! #கண்டுபிடிப்பு
43. சோப்பு போட்டு குளிச்சா அழுக்கு போகுமோ போகாதோ.. சோப்பு போடலைன்னா புரமோஷன் கண்டிப்பா போயிடும்! #கண்டுபிடிப்பு
44. யாணை மேலே போனாலும் பூனை 'மியா..மியா' ன்னுதான் கத்தும்!#கண்டுபிடிப்பு
45. கால் கடிதாசி எழுத அரை நாள் யோசிச்சு முழுநாள் வீணாப்போச்சு!
05-Aug-2011
46. உன் வளையலோசையில் என் வாலிபம் தொலைந்தது!  
47. உன் மேனி நிறம் காண மேகக்குவியலும் ஆசை கொள்ளும்!
48. நீ போடும் எட்டுப்புள்ளி கோலங்களில்தான் எத்தனை கவிதைகள்!
49. உன் விழிப் புருவம் கோணம் காண வானவில்லும் முயற்சி செய்யும்!
50. உன் வீட்டு பால்கனியில் மட்டும் ஏன் நிலவு அடிக்கடி எட்டிப்பார்க்கிறது?
51. உன் வீட்டு ஜன்னலில் அடிக்கடி மின்னல்!
52. என் வீட்டு வாசல்கதவில் உன் வாசம் ஒட்டிருக்கிறது!
53. வாழ்க்கையில் வாழாதவங்களும் வாழ்ந்திட்டுத்தான் இருக்காங்க!
06 to 12-Aug-2011
54. மணம் என்பது மனம் மாற அல்ல!  
55. நிஜத்தை நிர்வாணமாக்கி.. கட்டணமின்றி சுமந்து செல்லும் என் கனவுகள்!
56. காலத்தேவதையின் ஜாலப்பூவலையில் கட்டுண்டு, கசிந்துருகும் கண்ணீர் திவலைகள்!
57. கொணடாட தெரியாதவர்கள் பெறும் வெற்றி, செவிடன் கையில் கிடைத்த ஆடியோ சி.டி போல.
58. கசாப்புகாரன் ஒரெ அறுப்பிலே முடிச்சுடரான் ஜோலிய..இங்க அப்படியா?
59. இன்றைய தலைமுறையினர், தமிழ் கற்க, 1975 to 1980 பாட்டுகள் கேட்டாலே போதும். அமெரிக்கவாழ் தமிழர்க்கு வேண்டுகோள்!
60. உன் கண்கள் சொல்லிய கவிதைகள்தான் என் நெஞ்சின் உணர்வலைகள் ! 61. உன் சுவாசம் தான், இந்த காற்றில் கலந்த உயிரலைகள்!!
62. உன் கண்வீச்சு அணு உலை கதிர்வீச்சையும் அடக்கி விடும்!
63. உன் வீட்டு ஜன்னல், என்ன மின்னலுக்கு போட்டியா?
64. உன் கால் கொலுசு சப்தங்கள், என் கனவுகளில் வாழும் சந்தங்கள்!
65. சட்'டென்று திரும்பினாய் நீ! பொட்'டென்று விழுந்தது என் மனது!!
66. உன் நினைவுகளை, என் நினைவுகளால் அழிக்கமுடியவில்லை!
67. ஒரு நல்ல மனிதர்க்கான எல்லாத் தகுதியும் படைத்தவர் தல! அவரை குறை சொன்னா வழுக்கையாகும் உன் தலை!#மங்காத்தா
68. பாராட்டத்தெரியாத உலகத்தில் பைத்தியகாரன்தான் தலைவன்!
69. ..படாது என்றாலும் படுத்துகின்றன சில ஞாபகங்கள்!
70. வாய்மையே வெல்லும் என்றால், பொய்மை ஏன் ஆனந்த கூத்தாடுகிறது?
71. அதிகாலையிலே. நீ புள்ளிகளை சிறை வைக்கும் கோலங்கள் இடுவது முறையா?
72. பணி நிமித்தம் பணிவதற்க்கும், பணிமூப்புக்காக குனிவதற்கும் சுமார் ஆறு வித்தியாசங்கள் உள்ளன!
73. உங்கள் முகம் அழுக்குப்படும் போது, முதலில் முந்தானையில் துடைத்துவிடுவது, உங்கள் மனைவிதான்!
74. நாலு பேரு நல்லா இருக்குணும்னா..ஒரு டிவிட்' பண்ணறது தப்பே இல்லை!!!
75. இட ஒதுக்கீடு பிரச்சனையை தீர்க்க ஒரே வழி..ம்..ம்..ம்.. நிறைய இடம் வாங்கணும்! விலை என்ன ஆனாலும் பரவாயில்லை!
76. உன் கன்னம் சிவந்தால் பா.விஜய்யும் பைத்தியமாவான்! அந்த வைரமுத்துவும் பித்தனாவான்! வாலியும் வழுக்கிவிழுவான்! கண்ணதாசனும் கதறி அழுவான்!
77. நீயில்லை என்று நினைத்தாலே, இதயத்தில் 7.8 ரிச்ச்ர்ட்ஸில் நடுக்கம் ஏற்படுகிறது!
78. சலவைக்கு போட்டு நாலு நாளாச்சு! துவைச்ச துண்டும் ரெண்டாச்சு! CBI காரன் வந்தாச்சு! ஆவணம் ஒண்ணும் சிக்கல! கோவணம் இன்னும் காயல!!
79. உன் கணிணி, கன்னியுன் கண்ணைப்பார்த்த பின்னரும் இயங்குவது என்ன அதிசயமோ?
80. உன் முத்தத்திற்கு நான்தானே மொத்த குத்தகை!
81. உன் 'இச்'சுக்கு இணையான கவிதை.... இது வரை எவனும் எழுதியது இல்லை!!!
82. உன் கூந்தல்தானே..நக்கீரனையும் பொய்யனாக்கியது?
83. உன்னைப்பார்த்த பின்னர்தான்... ஆச்சர்ய குறி உயிர் பெற்றது!!
84. ராமன் சீதைக்காக வில்லெடுத்தான்! உன் மாமன் உனக்காக சொல் தொடுத்தான்!!
85. 


































No comments: