Popular Posts

Friday, July 29, 2011

குலப்பெண்!

வாசல் பெருக்கி கோலம் போட்டாங்க!
வாசம் வச்ச பூவோடு வளய வந்தாங்க!
மாமன்முறை வந்தாக்க..
வளையல் சத்தம் தந்தாங்க!
தாவணி போட்டாங்க!  தண்ணீர் குடமெடுத்து 
தழைய வந்தாங்க!
கண்மையெடுத்து புருவம் வச்சாங்க!
கண்களில் மட்டும் காதல் சொன்னாங்க!
பரிசம் போட்ட மாமன் மேலே
பாசம் வச்சாங்க!
வீரம் பார்த்தாங்க!   நல்ல நேரம் பார்த்தாங்க!
தவமாயிருந்தாங்க!  தாலி கேட்டாங்க!
வம்ஸம் விட்டு வம்ஸம் வந்தாங்க!
பெற்ற தாயை விட்டாங்க! தந்தையை மறந்தாங்க!
வளர்ந்த வீட்டிலே.
பழகிய பாசம்..பல நாள் நேசம்
விட்டுச்சென்றே..இல்லை..சுட்டுக்கொன்றே..
கொண்டவனை கொண்டாடி நின்னாங்க!
குணமாய் வாழ்ந்து குங்குமம் காத்தாங்க!
கொண்ட குலம் வளர்த்தாங்க!

காலம் மாறிப்போச்சு!
காதலும் மாறிப்போச்சு!
காசு பணம் பார்த்த பின்னே
கால்கட்டு போடுறாங்க!
கட்டும் நிக்கலே..வைச்ச
பொட்டும் ஒட்டலே!
குடும்பம் குறுகிப்போச்சு!
நம்ம குலமும் கருகிப்போச்சு!!!

No comments: