Popular Posts

Tuesday, July 26, 2011

விவாக ரத்துக்கள்!


மணந்த பின்னே மணம் மாறும்!
மனமின்றித்தடுமாறும்!
ரத்த உறவுகளையும் ரத்தாக்கும்!
மணம் குன்றி மரணிக்கும்!

உறவுகளை உருக்குலைத்து
உயிரோடு ரணமாக்கும்!
மழழை மொழிக்குழந்தை ..
மௌனத்தில் தத்தளிக்கும்!

மஞ்சள்கயிறுகளை
மஞ்சள்பத்திரிக்கை சேகரிக்கும்!
அந்தரங்க வாழ்க்கையெல்லாம்
அற்பர்தம் வாய்  உச்சரிக்கும்!

மூன்று முடிச்சுகள் முச்சந்தியில்
முகம்சுளிக்க அவிழ்க்கப்படும்!
 
எந்த ஊரும் உன் பேர் மதியாது!
உன் எச்சில் கூட
எச்சில் இலையில் பதியாது!

No comments: